×

2 நக்சல்கள் சுட்டுக்கொலை

சுக்மா: சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் தட்மெட்லா மற்றும் டியூடெல் கிராமங்களுக்கு இடையே உள்ள காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த நக்சல்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வீரர்கள் கொடுத்த பதிலடியில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 2 நக்சல்களின் தலைக்கும் தலா ரூ.1லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post 2 நக்சல்கள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Noxels ,Sugma ,Naksals ,Tadmetla ,Deutel ,Chukma ,Sattiesgarh ,2 ,
× RELATED சட்டீஸ்கரில் தேடுதல் வேட்டையின்போது...